முதல் பாகம் படிக்காதவர்கள் அதற்கான பதிவை கேட்டு பெற்றுக்கொள்ளவும்
முதல் பகுதியின் முடிவு சில கேள்விகளோட
முடிந்திருக்கும் , Mera என்ன செய்ய போகிறாள் ?
Loki யின் அடுத்த திட்டம் என்ன?
Thor இன் அடுத்த முடிவு என்னவாக இருக்கும்?
இந்த கேள்விகளுக்கான பதிலை பகுதி 2 இல் பார்க்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன் சரி இப்போது பகுதி இரண்டை பார்க்கலாம்
Thor Asgard-டை விட்டு போனது Loki-கு தெரியவந்ததும் loki முகத்தில் ஒரு “புன்னகை”
Loki : “இது தான் சரியான சமயம்”
Thor Asgard – இல் இருக்கும் வரை நான் சிறையை விட்டு வெளியேவர முடியாது என்று loki கு தெரியும் இப்பொது thor இல்லாத காரணத்தால் loki சிறையில் இருந்து தப்பியுள்ளார் .அங்கு தன்னை போலவே ஒரு போலி உருவத்தை விட்டு செல்கிறார்
பூமியில் jane னை பார்த்ததும் கவலை அடைந்த தோர் ஒரு Bar ரில் உக்காந்து புலம்பிக்கொண்டுருக்கிறார்…
Stanlee : என்ன தம்பி..ரொம்ப சோகமா இருக்க ஏதாவது பிரச்சனையா..
Thor : இல்ல அதலாம் ஒன்னும் இல்ல
Stanlee : என்ன தம்பி எந்த பிரச்சனையும் இல்லாமலா..அரை drum Beer-அ 5 நிமிசத்துல குடிச்சிட்ட
Thor : நான் ரொம்ப குழப்பமா இருக்கேன்…
Stanlee : எதுவா இருந்தாலும்..தயங்காமல்..சொல்லு..என்னால முடிந்ததை பண்ணுறேன்..
Thor தன்னை பற்றியும் jane னை அவரது காதல் பற்றியும் பிறகு அவர் மனதில் உள்ள குழப்பத்தை பற்றியும் கூறுகின்றார்..
Thor : நான் ரொம்ப நாள் கழிச்சு..இப்போ அவள திரும்ப பாக்க வந்தேன்…ஆனா அவ வேற ஒருத்தன் கூட உக்காந்து சிரிச்சு பேசிட்டு இருந்தா
Stanlee : அவ Boy bestie ஆ இருக்கும்
Thor : வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதீங்க
Stanlee : இவ்ளோதான் உன் பிரச்சனையா
Thor : என்ன இத இவ்ளோ சாதாரணமா சொல்லுரிங்க….
Stanlee :இங்க பாரு தாடிக்காரா முடி இருக்குற அளவுக்கு மூளையும் இருக்கணும்.
இது எல்லாருக்கும் ஏற்படுற ஒன்னு தான்..தன் காதலியை..இன்னொரு பையன்..கூட பார்த்த..ஒன்னு கோவம் வரும் இல்ல குழப்பம் வரும்..உனக்கு குழப்பம் வந்துருக்கு..அவ்ளோதான்…
இன்னும் உனக்கு புரியுற மாரி சொன்ன…
Possesiveness-ங்குறது மொட்ட மாதிரி அப்ப அப்ப போடலாம் பிரச்சனை இல்ல ஆனா சந்தேகங்குறது சொட்ட மாதிரி ஒரு தடவை வந்தா போகவும் செய்யாது பெருசாகிட்டேவும் போகும்,
Thor : சரியா தான் சொல்லுரிங்க நீங்கலும் நிறைய Love பண்ணீங்க போல பாதி மண்டய காணோம்…
Stanlee : ஏன் சொல்லமாட்ட..உனக்கு முடி நிறைய இருக்குல்ல..என்னைக்காவது ஒரு நாள்..இத இழுத்து வச்சு ஒருத்தன்..வேட்டதான் போறன்…
சரி அதைவிடு எதுவா இருந்தாலும்..அந்த பொண்ண பார்த்து..பேசிடு..குழப்பதுல..இருக்குற..உன் மனச
தெளிவு படுத்திக்கோ… கண்டிப்பா அவ உன்னவிட்டு போக மாட்டா நம்பிக்கையோட இரு
Thor : பரவால்ல நீங்க சொல்லுறதா கேக்குறதுக்கும்..நல்ல ..தான் இருக்கு..அப்புறம்
உங்க.. Advice க்கு ..ரொம்ப..நன்றி அரை drum Beer க்கும் தான்…
Stanlee : excelsior..(சிரிப்புடன்)
Stanlee யுடன் பேசிய பிறகு தோர் சிறு குழப்பத்துடனே Avengers Headquarters செல்கின்றார். அங்கு Tony Stark மட்டுமே இருந்தான் மற்ற அனைவரும் வேறு வேலையில் இருந்ததால் அங்கு யாரும் இல்லை.
Thor :என்னமோ பலமா யோசிச்சுட்டு இருக்க, போன முறை வந்தப்ப பெப்பர் கிட்ட எப்படியாவது love அ சொல்லணும் ன்னு ஐடியா கேட்ட எந்த முறை என்ன யோசிக்கிற”
Tony : இந்த முறை ஆகார்ட் ஐ எப்படி ஆட்சி பண்ணலாம் ன்னு யோசிச்சுட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி அந்த சுத்தியல தூக்கனும் ல அதன் எப்படி ன்னு பிளான் பண்ணிட்டு இருக்கேன்
Thor : “உன்னோட இந்த வேடிக்கையான பேச்சை ரொம்ப miss பன்றேன் டோனி”
Tony : “அப்படியா, பாத்த அப்படி தெரியலையே, நல்லா தின்னு கொழுத்து தான போயிருக்க.”
Thor : “அது பீர் குடிச்சனால அப்படி தெரியுது. அப்புறம் எப்படி இருக்க டோனி, ரொம்ப நாள் ஆச்சு உன்ன பாத்து. ஏன் avengers building ல யாரும் இல்லை.”
Tony : உன்னை பாத்ததுல ரொம்ப சந்தோசம் தோர், avengers க்கு இன்னைக்கு ஒரு நாள் leave விட்டுட்டேன். தோர் மறுபடியும் Ultron Project உருவாகிடுச்சு.”
Thor : தோர் கோபத்துடன் ” முதல் முறை வந்தப்பவே அதை சமாளிக்க ரொம்ப கஷ்ட பட்டோம். அதை தான் உருவாக்க கூடாதுன்னு உங்க security council முடிவு பண்ணங்களே. யாரு உருவாக்கியது tony”.
Tony : தோர் I am sorry, நான் தான் உருவாக்குனேன்
தோர் இன்னும் கோவம் கொண்டு டோனியின் கழுத்தை பிடித்து “ஏன் இப்படி பண்ண, இந்த உலகம் அமைதியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா. ஏன் இப்படி பண்ண…”
Tony : தோர் relax, ‘கொஞ்சம் மூச்சு வாங்கி கொண்டு’, இந்த உலகத்துல ஏலியன்கள் அதிகம் வர ஆரம்பிச்சுட்டாங்க, எல்லாரையும் நாம மானிட்டர் பண்ணி அழிக்க முடியாது, சில நல்ல ஏலியன் உம் இருக்காங்க உன்னை மாதிரி. நா கெட்ட ஏலியன் கிட்ட இருந்து காப்பாத்த தான் இப்படி பண்ணேன். அதை என்னால அழிக்க முடியும் நீ கவலை படாதே”
Thor : இங்க பாரு டோனி நீ என்ன சொன்னாலும் என் மனசு ஏத்துக்காது, நீ இதை சரி பண்ணியே ஆகணும், இல்லைனா நா உன்ன சும்மா விடமாட்டேன்
Tony : இதை உருவாக்குனது நான், இதை எப்படி அழிக்கணும் ன்னு எனக்கு தெரியுதும், நா உன்ன வரும் போதே பார்த்தேன். உன் மனசுல ஏதோ ஒரு சங்கடம் இருக்கு மறைக்காம சொல்லு தோர்
தோர் இங்கு வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான். பின் என்ன செய்வது என்று தெரியாமல் இங்கு வந்ததாக கூறினான்.
“இங்க பாரு தோர் நீ அவளை பல வருஷம் கழிச்சு பாக்குற, நீ அவளை சந்தேக படுறது தப்பு, ஒரு வேளை அது அவ friend ஆ கூட இருக்கலாம். அவ உன்கிட்ட வந்து love பன்றேன் ன்னு சொன்னலா, இல்லை ல, so you once see her”
Thor : பரவலை உன் ஐடியா வும் நல்லா இருக்கு
இதே தான் அந்த பெரியவரும் சொன்னாரு…
நான் போய் பாக்கிறேன். வந்துள்ள இருந்து கேட்கணும் ன்னு இருந்தேன், steve எங்க”
Tony : Hey தோர் எனக்கும், கேப்டன் க்கும் ஒரு சின்ன tough ஆகிடுச்சு, அதனால avengers விட்டே அவர் போயிட்டார். இப்ப எங்க இருக்கார் ன்னு தெரியல. அது பழைய கதை. உனக்கு அப்புறமா சொல்லறேன்.
Thor : உன்கூட யாரும் கடைசிவரைக்கும் இருக்க மாட்டாங்க போல, atleast பெப்பர் கூடையாவது ஒன்னா இரு. நா இங்க இருந்து கிளம்புறேன். முக்கியமான வேலை இருக்கு
Tony : அந்த decor அ அசிங்க படுத்தாம போ, அதை இப்ப தான் ரெடி பண்ணிருக்கு.
Thor : சரி..asgard.. போறதுக்கு முன்னாடி கடைசியா jane அ பாத்துட்டு போயிடலாம்.
இதே நேரத்தில் loki Asgard இல் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார் , loki Asgard கு அரசர் ஆகிவிட்டார் odin -ணை தோர்கடித்து , நேர்மையாக அல்ல , சூழ்ச்சி செய்து .இப்போது odin உருவத்தில் asgard இல் ஆட்சி செய்கிறார் loki.
Aquaman தன் தந்தை Thomas curry யுடன் பேசிக்கொண்டுரிக்கிறார்
Aquaman : அப்பா நீங்க முதல் முதல்ல
அம்மாவ எப்படி பாத்தேன்னு சொன்னிங்கள,
அதாவது..ஒரு விபத்தில் அவங்க light house பக்கம் ஒதுங்குநாங்க நீங்க அவங்கள காப்பத்துனது…
Thomas : ஆமா அதுக்கு அப்புறம் தான் என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு. “என்னக்கு அவளுக்கு காதல் மலர்ந்துச்சு”
Aquaman : அப்பா போது திரும்பவும்..உங்க flashback அ ஆரம்பிச்சுடாதிங்க…
நான் சொல்ல வந்ததை சொல்லிடுறேன்…
Thomas : சரி சொல்லு கேப்போம்
Aquaman : நானும் ..ஒரு பொண்ண கடலிருந்து காப்பற்றினேன் …அவ பேரு jane , ரொம்ப நல்ல பொண்ணு…இதுக்கு முன்னாடி நானும் நிறைய பேரை காப்பாத்திருக்கேன்…ஆனா என்னாமோ…தெரியல..இவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு…
Thomas : கேக்குறதுக்கு நல்ல தான் இருக்கு உன் கதை….ஆனா..mera..வ..நீ காதலிக்கலையா…என்ன
Aquaman : இல்ல..mera..மேல..உள்ள காதல்..எனக்கு..இன்னும்..குறையவில்லை ஆனா..mera வுக்கு..jane அ சுத்தமா..புடிக்கலை..
Thomas : யாருக்கு தன் புடிக்கும் ஒரு பெண்ணுக்கு, இன்னொரு பொண்ணுகிட்ட பேசுறதை …இது எல்லாருக்கும் இருக்குற…பிரச்சனை..தான்…
இதுக்கு பெரு தான் possessiveness னு சொல்லுவாங்க…நீ..jane மேல காட்டுர..அன்பு..mera..வ..மனதளவில்
காயப்படுத்தி இருக்கும்.
Aquaman : இப்போதான்…எனக்கு..எல்லாமே புரியுது..நான்..ரொம்ப..பெரிய..தப்பு பண்ணிட்டேன்…
Thomas : ஏன் என்னாச்சு…?
Aquaman : நான்..jane கிட்ட.. mera என்னோட friend னு சொல்லிட்டேன்..
Thomas : இது mera வ கண்டிப்பா பாதிச்சிருக்கும்…
நீ…உடனடியா..அவளை சமாதான படுத்து
தன் தந்தையிடம்…பேசிய பிறகு
Mera வை பார்க்க செல்கிறார் aquaman
Aquman : என்ன mera என் மேல ரொம்ப கோவமா இருக்கியா..
Mera : cha cha அப்படி எல்லாம்…எதுவும் இல்லை
Aquaman : ஆனா உன் முகத்தை பார்த்தா அப்புடி தெரியலையே…
Mera : இப்போ என்ன என் கூட நீ சண்டை போட்டே ஆகணுமா
Aquman : …சரி அதை பத்தி பேசல நீ என் கூட
westfjords iceland கு வறிய நான் அங்க இருக்குற கிராம மக்களை பார்க்கபோறேன்
நீயும் வாரிய..
Mera : நீ போயிட்டுவா எனக்கு இங்க ஒரு சின்ன வேலை
Aquaman : சரி உனக்கு இன்னும் கோவம் குறையலனு நினைக்குறேன்…நான் போய்ட்டுவரேன்…
atlantis -இல் உருவாக்கிய ஒரு விஷம் jane – னின் உணவில் கலக்கப்படுகிறது…
இந்த விஷம் ஒருவர் உடலுக்கு சென்று அவரை கொஞ்சம் கொஞ்சமாக நோய் வரச்செய்து கொள்ளும்.
Jane அந்த விஷத்தை சாப்பிடுவால ?
இல்ல thor அவளை காப்பாற்றுவரா…?
யார் விஷம் கலந்தது…? என்ற கேள்விகளுக்கு…அடுத்த ..பகுதியில்..விடை காணலாம்..