Tag Archives: Comics

The Watcher – Special Episode

Cosmos Crossover Universe என்று ஏதோ புதியதாக ஒரு universe உருவானது போல் உள்ளது. இந்த Universe மிகவும் வித்தியாசமானதாக எனக்கு தோன்றியது.

இதனைப் பற்றி யாருக்கு நன்றாக தெரியும் என நான் யோசித்த போது எனக்கு நினைவிற்கு வந்தவர் Uatu ( உவாட்டு ) the watcher. அவருக்கு இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் உருவான காலம் முதல் இன்று வரை நடந்த அனைத்து‌ நிகழ்வுகளும் தெரியும். ஏனெனில் அவர் இவற்றையெல்லாம் பார்ப்பதற்காகவே படைக்கப்பட்டவர். அதனால்தான் அவர் watcher.
பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் நான் அவரைக் கண்டுபிடித்தேன் ஆனால் நான் வருவது அவருக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தது நான் பேசத் துவங்குவதற்குள் அவர் என்னிடம் இருந்த
கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கினார்.

⭐”நான் தான்….. uatu the watcher. நான் இந்த
பிரபஞ்சங்களில் நடக்கும் அனைத்தையும் பார்த்து
Obeserve செய்வதற்காகவே படைக்கப்பட்டவன்.”

⭐”நான் The World’s Greatest Heroesஐ தன்னுள் அடக்கிய
DC universeஐயும் பார்த்துள்ளேன். The World’s Mightiest
Heroesஐ தன்னுள் அடக்கிய Marvel Universeஐயும்
பார்த்துள்ளேன். இந்த இரண்டு Ultimate Heroesஐயும்
தன்னுள் அடக்கிய Cosmos Crossover Universeஐயும்
நான் பார்த்துள்ளேன்.”

⭐”இந்த CCUவிற்கு Marvelயின் The One Above Allஐயும்
DCயின் Presenceஐயும் இணைத்தது போல உள்ள
ஒரு entity மையமாக உள்ளதை என்னால் பார்க்க
முடிந்தது.”

⭐”Asgardயின் இளவரசன் பூமியில் சாதாரண
மனிதனாக மாற்றப்பட்டது, கிரிப்டானின்
கடைசி மகன் கடவுளாக்கப்பட்டது என
அனைத்தையும் நான் இந்த ஒரே Universeயில்
பார்த்தேன்.”

⭐”Mightiest Soldierவும் இந்த Universeயில் உள்ளார்
Greatest detectiveவும் இதே universeயில் உள்ளார்.”

இவ்வாறு தனது பேச்சை நிறுத்தினார் Uatu இந்த சில கருத்துகளில் இருந்தே எனக்கு இந்த cosmos Crossover universe எப்படிப்பட்டது எனப் புரிந்துவிட்டது. Marvel universe and DC universe இரண்டும் தனித்தனியாக இருந்தாலே மிகவும் சுவாரசியமாக இருக்கும் இங்கு இரண்டும் சேர்ந்தே உள்ளது அதனால் CCUயில் நடக்கும் நிகழ்வுகளை நானும் Watcherஐ போல் பார்க்க விரும்பினேன். So Watcherயிடமிருந்து அவரது சக்திகளை கொஞ்ச நாட்களுக்கு கடன் வாங்கிக்கொண்டேன் 😁( writersகு இல்லாத powersஆ).

“So இப்போ நான்தான் George of Steel the Watcher இந்த Universeகளில் நடக்கும் நிகழ்வுகளை Observe செய்வதே என் வேலை”

Dutyல சேந்த முதல் நாள், So கொஞ்சம் வேலை செய்துதான் ஆகனும் நான் முதலில் இந்த Universeயில் பார்க்க விரும்பியது இங்கும் கொரோனா உள்ளதா என்று. நான் அதைப் பற்றி சிந்திக்க துவங்கியதும் கொரோனா சார்ந்த நிகழ்வுகள் என் கண் முன் ஓடத் துவங்கியது(சும்மா சொல்லக் கூடாது Watcherஓட powers வேற லெவல்) இங்கும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டுள்ளது ஆனால் அது reed richards மற்றும் bruce wayne இருவரின் உதவியோடு சரி செய்யப்பட்டுவிட்டது.

இப்போது நான் இங்குள்ள Superheroes என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க விரும்பினேன். Iron man முதலில் என் பார்வைக்கு வந்தார் அவர் இதுவரைப் பட்டது போதாது என்று ultronஐ மறு உருவாக்கம் செய்ய முற்பட்டு அதன் கொடூரமான இரண்டாவது versionஐ உருவாக்கி மீண்டும் ஒரு பிரச்சினையை create செய்திருந்தார் ஆனால் அந்தப் பிரச்சினைக்கு பின் வேறொரு சதி இருப்பது என் கண்ணில் பட்டது ஆனால் அதை கூறி நடக்கப் போகும் நிகழ்வுகளை நான் தடுக்க விரும்பவில்லை. Batman அவரது வழியில் குறுக்கிடப் போவது போல் எனக்கு தோன்றியது.

சரி Superman என்ன செய்கிறார் என நான் பார்த்த போது அவர் வழக்கம் போல இந்த உலகின் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தார். அவருக்கு எதிராக lex ஏதோ சதி செய்வதும் எனக்கு தெரிந்தது.
Aquamanயிற்கும் Thorகும் இடையேயும் காதலின் மூலம் பிரச்சினைகள் உருவாகிகொண்டு உள்ளது.

சரி எதாவது ஒரு வில்லனை பார்க்கலாம் என நான் நினைத்து dr doom பக்கம் எனது பார்வையை திருப்பினேன் ஆனால் அவனைப் பார்த்ததும் எனது நினைவுகளில் தடங்கள் ஏற்பட்டது. வேறு எதோ ஒரு முக்கியமான நிகழ்வை நோக்கி எனது நினைவுகள் என் பார்வையை அழைத்து சென்றது.

வேறொரு universeஐ சேர்ந்த ஒரு பயங்கரமான சக்தி இந்த CCU Universeகுள் வருவதற்காக முயற்சி செய்துகொண்டு‌ இருந்தது. என்னால் இந்த Universeகு வெளியே இருக்குற அந்த அதிபயங்கர சக்தியையும் பார்க்க முடிந்தது. அவனது எண்ணங்கள் இந்த மொத்த பிரபஞ்சங்களையும் அடைய துடித்துக்கொண்டிருந்தது. நான் அவனைவிட்டுப் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தேன் இருந்தாலும் அவனது சக்திகள் என்னை வறுத்தெடுக்கத் துவங்கியது (சூரியனுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு இருப்பது போல் ஓர் உணர்வு)

அவனது முகத்தை எனது பார்வையால் நெருங்கினேன் …………………………………………………………….

“இல்ல இது வாய்ப்பே இல்ல அது Dr Doomஓட முகம் ஆனா அவன் அவனோட வழக்கமான பச்சை நிற உடையோட இல்ல அதோட அவன் CCUவ சேந்த Doomவும் இல்ல.

Comments முக்கியம் மக்களே next partல meet பன்றேன்

Speed Man – Part 2

204‌0 பது நம் வாழும் பூமி இந்திய பெருங்கடல். Australia வை சார்ந்த சுற்றுலா கப்பல் 1000 பயணிகள் உடன் கடலில் விபத்துக்குள்ளானது. ஒரு சில பயணிகள் கடலிலும், பலர் கப்பலிலும் உயிர்க்கு போராடி கொண்டிருந்தனர். அருகில் உள்ள கடற்படை வீரர்கள் அவர்களை காப்பாற்ற விரைந்து வந்து கொண்டு இருந்தனர். கப்பல் இருந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் வானில் இருந்து ஒரு ஒளி கடலில் விழுந்தது. ஒளி விழுந்த அதிர்வில் கப்பல் விரைவாக மூழ்கியது. ஒளி அங்கு கடலில் உயிர்க்கு போராடிய மக்கள் மீது ஒளி தஞ்சம் அடைய முயற்சி செய்து அவர்கள் உடல் தாக்குப்பிடிக்காமல் உடல் எரிந்து கடலில் மிதந்தது. கடற்படை வீரர்கள் அங்கே வரும்பொழுது கப்பல் கடலில் முழுவதும் மூழ்கியது. பலர் கடலில் மூழ்கியும் சிலர் கடலில் தீயல் எரிந்தும் இறந்தனர் மற்றும் அந்த கடல் பகுதியில் வாழ்ந்த சில சுறாக்களும் தீயல் எரிந்து இறந்தது கடற்படை வீரர்களுக்கு தெரியவந்தது. பல நாடுகளை சார்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட இந்தியாவை சார்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர் அனைவரும் கப்பல் விபத்தில் இறந்து விட்டனர் என‌ அறிவிக்கப்பட்டது.

இலங்கை, தலரம்பா கடற்கரை காலை மணி 04:50. கடற்கரையில் ஒரு உடல் கரை ஒதுங்கி கிடைக்கிறது என அங்கு இருக்கும் கடல்சார் காவல் துறையினர்க்கு தகவல் கிடைக்கிறது ‌. மருத்துவ குழு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் விரைந்து சென்றனர். உடலில் உயிர் இருக்கிறது என்று அறிந்த மருத்துவர்கள் அரசு ஆஸ்பத்திரி யில் வைத்து சிகிச்சை கொடுக்கிறார்கள்.

சிகிச்சை அளிக்கும் போது அவர் தமிழ்மொழியில் முனகினார் என அறிந்த காவல்துறையினர் இலங்கை தூதரகம் மூலம் இந்தியா தூதரகத்துக்கு தகவல் கொடுத்தனர். இந்தியா ‌‌‌தூதரகம் தமிழ் நாட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த நபரின் புகைப்படம் மட்டும் அங்கு அடையாளங்களை‌ அனுப்பி வைத்தனர்.

ஒரு சில நாட்களில் அந்த நபர் பெயர் அர்ஜுன், கப்பல் விபத்தில் இறந்து விட்டார் என அறிவிக்கபட்டவர் என்பது அனைவருக்கும்‌ தெரியவருகிறது.
அவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசின் முயற்சியில் அர்ஜுன் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகிறார்கள். இலங்கை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மருத்துவ குழு அர்ஜுனுக்கு கடந்த காலம் ஞாபகம் இல்லை என தெரிவித்தனர்.

அர்ஜுன் அவர் அக்கா, மாமா உடன் தன் கடந்த காலம் ஞாபகம் இல்லாமல் வாழ்க்கை ஆரம்பிக்கிறார்.‌ அர்ஜுன்‌ தனக்கு ஓதுக்கபட்ட அறையில் தனிமையில் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌இருந்தான் அனால் சுறுசுறுப்பாக
இருந்தான். அர்ஜுன் அறைக்கு‌ள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதுவே அர்ஜுன் மாமாக்கு அர்ஜுன் அறையில் கேமரா வைக்கும் என்னம் தோன்றியது. ஒரு நாள் அதுவும் கைக்கூடியது தன் நண்பனின் ஆலேசனை படி அர்ஜுன் அறை கதவில் சிறு தோளையிட்டு கேமரா பொருத்தப்பட்டது. அன்று முதல் அர்ஜுன்‌ மாமா கெஸ்வன் கேமரா மூலம் அர்ஜுனை‌ கண்காணித்து வந்தான். அர்ஜுன் தனது அறையின் சுவர்களியின் மீது நடந்து கொண்டுருந்தான் அர்ஜுன்‌ உடம்பில் இருந்து ஒரு விதமான ஒளியும் அறை முழுவதும் பரவி இருந்தது இதை சற்றும் எதிர்பார்க்காத கெஸ்வன்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்து இருந்தது அர்ஜுன் பல விதமான ஓவியங்களையும் வரைந்து வைத்துருந்தார். அர்ஜுன்‌க்கு ஏதோவொரு சக்தி இருக்கிறது என்று தெரிந்த கெஸ்வன்க்கு அன்று இரவு தூக்கம் பல கனவுகள் தந்தது. அர்ஜுனுக்குள் இருக்கும் திறமையை பணமாக மாற்றும் ஆசை உருவாக்கியது. இதுவே அர்ஜுன் மித்திரன் ஆக‌ மாற காரணமாகிறது.